Saturday, September 14, 2013

இதுவரை விலங்கினங்கள் மீது 3,20,000 வைரஸ்கள் கண்டறியப்பட்டது!



விலங்கினங்களிடம் நாம் இதுவரை கண்டறியாத லட்சக்கணக்கான கிருமி வகைகள் காணப்படுவதாக புதிய ஆய்வு ஒன்று சுறியுள்ளது. மனிதர்களைப் பாதிக்கும் பெரும்பாலான நோய்க் கிருமிகள் விலங்குகளிடத்தில் இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு நோய்க் கிருமிகள் இருக்கக்கூடிய வௌவால் இனத்தை அமெரிக்க மற்றும் வங்கதேச விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

நாம் இதுவரை அறிந்திராத புதிய அறுபது வகையான கிருமிகள் அந்த வௌவால் இனத்தில் இருப்பதை அந்த விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். மற்ற விலங்கினங்களிலும் 3,25,000 வகை நோய்க் கிருமிகள் விலங்கினங்களிடம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணக்கிடப்பட்டுள்ளனர். இந்த நோய்க் கிருமிகளை நாம் அடையாளம் கண்டுக்கொண்டு சரி செய்தால் எதிர்காலத்தில் தொற்று நோய்கள் மனிதரிகளிடையே பரவுவதைத் தடுக்க உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இத்தனைக் கிருமிகளையும் கண்டறிய ரூ-.600 கோடி டாலர்கள் செலவாகும் என்று ஆராய்ச்சிக் குழு தெரிவிக்கிறது. ஆனால் ஒரு தொற்றுநோய் மனிதர்களிடம் பரவிவிட்டால் அதனைக் கட்டுப்படுத்த இதனைவிட பல மடங்கு அதிகமான தொகை செலவாகும் எனவும் அவர்கள் கூறுகின்றனர். பிரெடிக்ட் என்ற அமெரிக்க ஆய்வுத் திட்டம் நடத்திய இந்த ஆராய்ச்சியில், உலகில் மனிதர்களும் விலங்குகளும் சேர்ந்து வாழும் இடங்களில் இருந்து 240 புதிய வகை கிருமிகளை இதுவரை கண்டுபிடித்து அடையாளம் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment