Saturday, September 14, 2013

15-ல் அக்னி ஏவுகணை சோதனை!



கண்டம் விட்டு கண்டம் பாயும் "அக்னி-5' ஏவுகணை, இம்மாதம் 15-ம் தேதி ஒடிசா மாநிலம் வீலர் தீவில் இருந்து சோதனை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை உயரதிகாரிகள் கூறியது:


2012 ஏப்ரல் 19-ம் தேதி அக்னி-5 ஏவுகணை முதல் முறையாக சோதனை செய்யப்பட்டது வெற்றிகரமாக அமைந்தது. 


அதைத் தொடர்ந்து, 5000 கி.மீ.க்கு அப்பால் இருக்கும் இலக்கை துல்லியமாகத் தாக்கும் வல்லமை கொண்ட இந்த இரண்டாவது ஏவுகணை, 1000 கிலோ அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் திறன் படைத்தது. 


இந்த ஏவுகணை, 15-ம் தேதி வீலர் தீவில் இருந்து 2-ம் கட்டமாக சோதனை செய்யப்பட உள்ளது. 


வானிலை சீராக இருக்கும்பட்சத்தில் 15-ம் தேதி ஏவுகணை சோதிக்கப்பட்டுவிடும். 


முதல்கட்ட சோதனையில் இந்த ஏவுகணை நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது. 2-வது கட்ட ஏவுகணை சோதனையும் வெற்றி பெறும் என்றனர்.

0 comments:

Post a Comment