Friday, December 27, 2013

விவேக் மற்றும் சந்தானத்துடன் உலகநாயகனின் உத்தமவில்லன்




உலகநாயகன் கமல்ஹாசன் தற்பொழுது எழுதி இயக்கிவரும் “விஷ்வரூபம்-2” திரைப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பாலும் நிறைவடையும் தருவாயில் உள்ளன. இப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஷ்வரூபம் -2 திரைப்படத்தையடுத்து கமல்ஹாசன் ரமேஷ் அர்விந்த் இயக்கத்தில், இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கும் புதிய படமான “உத்தம
வில்லன்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். நகைச்சுவையை மையப்படுத்தித் உருவாகவிருக்கும் இப்படத்தில் தற்பொழுது நகைச்சுவையில் கலக்கிவரும் சந்தானம் மற்றும் விவேக் ஆகியோர் இடம்பெறலாம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கமலின் பேவரிட் வசனகர்த்தாவான கிரேஸி மோகன் இப்படத்திற்கு வசனங்களை எழுதுவார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தில் காஜல் அகர்வால் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
   

0 comments:

Post a Comment