Tuesday, December 17, 2013

வைப்பர்களுக்குப் பதிலாக புதிய தொழில்நுட்பம -இங்கிலாந்து நிறுவனத்தின் அப்டேட்!




இங்கிலாந்து நாட்டில் முன்னணியில் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்களில் மக்லரென் குறிப்பிடத்தக்கதாகும். இந்நிறுவனம் பார்முலா-1 போட்டிகளுக்கான சூப்பர் கார்களைத் தயாரிப்பதில் முதலிடத்தில் உள்ளது. காரின் முன்புறக்கண்ணாடிகளைத் துடைக்கும் வைப்பர்களுக்குப் பதிலாக போர் விமானங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தில் இந்த நிறுவனம் உள்ளது.


இந்தப் புதிய திட்டத்தில் உயர் அதிர்வெண் அலைகள் மூலம் கண்ணாடிகள் சுத்தம் செய்யப்படும. இந்த சக்தியைப் பயன்படுத்தி கண்ணாடியின் மேல் விழும் குப்பைகள், பூச்சிகள், மண் மற்றும் நீர் முதலியவற்றை சுத்தம் செய்யமுடியும். மேலும்,வைப்பர்களை நீக்குவதன் மூலம் காரை ஓட்டுபவர்களுக்கு வெளிப்புறப்பார்வை தெளிவாகக் கிடைக்கும்.


இதற்கான மோட்டார்களை நீக்குவதன் மூலம் எரிபொருள் சக்தி அதிகரிக்கும். குளிர்காலத்தில் இந்த வைப்பர்களின் தகடுகள் இறுகி செயல்படாமல் இருப்பது போன்ற பிரச்சினைகளும் இந்தப் புதிய முறையில் தோன்றாது என்று மக்லரென் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


இந்த அதிர்வெண் அலைகள் முறையே பல் மருத்துவத்திலும், கருவிலுள்ள சிசுக்களைக் கண்டறியும் முறையிலும் பயன்படுத்தப்படுகின்றது. மக்லரென் நிறுவனத் தயாரிப்பு கார்களில் இந்தப் புதிய தொழில்நுட்பம் வரும் 2015க்குப் பிறகு அறிமுகப் படுத்தப்படும். அவற்றின் விலை 1,70,000 பவுண்டுகளில் இருந்து 8,70,000 பவுண்டுகள் வரை இருக்கும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment