Monday, December 2, 2013

நாற்பது லட்சம் சம்பளம் கேட்கிறாரா ப்ரியா ஆனந்த்?

 

இயக்குநர் மணி நாகராஜ் இயக்கும் படம் 'பென்சில்'. ஜி.வி பிரகாஷ் இதில் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார்.

'பென்சில்'  கதை, ஒரு புதுமுகத்துக்கானது. ஜி.வி., ஸ்கூல் பையன் கேரக்டருக்கு பக்கா பொருத்தமா இருப்பதால் ஹீரோவாக நடிக்கிறாராம்.

ஹீரோயினாக நடிக்கும்படி,  முதலில் ப்ரியா ஆனந்தைத்தான் கேட்டார்கள். ஆனால், அவர் படத்தில் நடிக்கவில்லை. ப்ரியா ஆனந்த் கால்ஷீட் கிடைக்காததால், வேறு ஹீரோயினை நடிக்க வைக்க முயற்சி எடுத்தார்கள்.

அதற்குப் பிறகே , ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா 'பென்சில்' படத்தில் நடிகக்க் கமிட் ஆனார். ஆனால், ப்ரியா ஆனந்த் நடிக்காததற்கு கால்ஷீட் தேதி காரணம் இல்லையாம். சம்பளம்தான் காரணமாம்.

'வணக்கம் சென்னை' படத்தில் நடிக்கும் வரை ப்ரியா ஆனந்த் சம்பள விஷயத்தில் கறாராக இருந்ததில்லையாம். கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக் கொண்டு, நடித்தாராம்.

ஆனால், இப்போது தன் சம்பளத்தை ஏகத்துக்கும் அதிகரித்துவிட்டாராம். 'பென்சில்'  படத்தில் ஹீரோயினாக நடிக்க, நாற்பது லட்சம் சம்பளம் கேட்டாராம்.

நாற்பது லட்சம் தர தயாராக இல்லாததால், நடிக்க முடியாது என நோ சொல்லிவிட்டாராம். அதனால்தான், அதைவிட குறைவான சம்பளத்தில் நடிக்க ஓ.கே சொன்ன ஸ்ரீதிவ்யா நடிக்கிறாராம்.

0 comments:

Post a Comment