Sunday, December 8, 2013

தமிழில் நடிக்க ஆசைப்படும் அமிதாப் பச்சன்..









பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், மலையாளத்தில் கூட, நடித்து விட்டேன்.


ஆனால், தமிழில் இன்னும் நடிக்கவில்லையே என்ற ஏக்கம் உள்ளது.


யாராவது, நல்ல கதை கூறினால், தமிழில் நடிப்பேன் என, கூறியிருந்தார்.


இதோ, இப்போது, அவரின் ஏக்கம் தீரப் போகிறது. ஜீவா, துளசி நடிக்கும், 'யான்' படத்தில், ஒரு முக்கியமான வேடத்தில், அதாவது சிறப்பு தோற்றத்தில், அமிதாப் நடிக்கப் போவதாக, கோடம்பாக்கத்திலிருந்து, செய்திகள் கசிந்துள்ளன.


பாலிவுட்டில், பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ரவி கே சந்திரன் தான், இந்த படத்தின் இயக்குனர் என்பதால், அவரின் நட்புக்காக, இந்த படத்தில் நடிக்க, அமிதாப், சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

0 comments:

Post a Comment