Sunday, December 15, 2013

தமிழ் சினிமாக்களில் அடிக்கடி கேட்கிற வசனங்கள்!



1. இன்ஸ்பெக்டர்ர்ர்ர்ர்.. நீங்க யார் கிட்டே பேசிக்கிட்டிருக்கீங்க தெரியுமா??

2. ஸாரி.. எதையுமே இருபத்து நாலு மணிநேரம் கழிச்சுதான் சொல்லமுடியும்.

3. நான் உங்களை உயிருக்குயிராஆஆஆஆ காதலிக்கறேன்..

4. சட்டத்தின் பிடியிலிருந்து யார்ர்ர்ர்ர்ர்ர்ரும் தப்ப முடியாது.

5. இன்னிக்கு ராத்திரி சரியா பனிரெண்டு மணிக்கு சரக்கோட அவன் வருவான்.

6. மிஸ்டர்____________! யூ ஆர் அண்டர் அர்ரெஸ்ட்!!

7. அடடே… யார் வந்திருக்காங்க பாரு..!!

8. நீயில்லாம என்னால ஒரு நிமிஷம்கூட உயிர் வாழ முடியாது.

9. தூக்குடா அவன..

10.நான் யாருங்கறது முக்கியமில்ல. நான் சொல்லப் போற விஷயம்தான்
   முக்கியம்.

11.உன்னப் பெத்து… வளத்து… ஆளாக்கி..

12.என் அன்னையின் மேல் ஆணை..

13.யாரும் அசையாதீங்க..அசைஞ்சா சுட்டுருவேன்.

14.அவன அடிச்சு இழுத்துட்டு வாங்கடா…

15.தாயில்லாத புள்ளையாச்சேன்னு செல்லம் குடுத்து வளத்தேனே…

16.எல்லாமே மேல இருக்கிறவன் பாத்துக்குவான்.

17.நான் கண்ண மூடறதுக்குள்ள இவள யார் கையிலயாவது புடிச்சுக்
   குடுத்தாதான் எனக்கு நிம்மதி.

18.என்னங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்க!!!.. எங்களையெல்லாம் ஏமாத்திட்டுப்
   போயிட்டீங்களே..

19.உங்க உப்பைத் தின்னு வளந்தவன் எஜமான். சொல்லுங்க என்ன
   செய்யணும்?

20.ஏய்ய்ய்ய்ய்ய்ய்!

21.என் வயித்துல நெருப்பு அள்ளிக் கொட்டிட்டியேடிஈஈஈஈ பாவி!!

22.என்னமோ தெரியல.. உன்னப் பாத்தா செத்துப் போன என் பையனை
   பாக்கிறமாதிரியே இருக்கு.

23.ச்சே.. நீங்கல்லாம் அக்கா தங்கச்சிகூட பொறக்கலே??

24.ஏ.. யாருடி அவன்..?

25.சார்.. போஸ்ட்..!!

26.கனம் கோர்ட்டார் அவர்களே.. ஒரு குற்றவாளி தப்பிக்கலாம். ஆனால் ஒரு
   நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது.

27.ஒரு பொண்ணு நினைச்சா…

28.இத்துடன் கோர்ட் கலைகிறது.

29.நான் இப்ப எங்கிருக்கேன் ?

30.எங்கப்பாவ கொன்னவன நான் பழிக்குப் பழி வாங்காம விடமாட்டேன்.

31.ஒரு பொண்ணோட மனசு ஒரு பொண்ணுக்குத்தான் தெரியும்..

32.நான் சொல்லப் போறதக் கேட்டு அதிர்ச்சியடையாதீங்க.. அவருக்கு
   வந்திருக்கறது…

0 comments:

Post a Comment