Sunday, November 24, 2013

பெரிய திரையில் மா.பா.கா. ஆனந்த்!

 


சின்னத்திரையில் இருந்து பல திறமைசாலிகள் பெரியத்திரைக்கு அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

சந்தானம், சிவகார்த்திகேயனை தொடர்ந்து இப்போது மேலும் ஒருவர் சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்திருக்கிறார். அவர்தான் மா.பா.கா ஆனந்த். இவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது.

இந்நிலையில் வானவராயன் வல்லவராயன் படத்தின் மூலம் மா.பா.கா ஆனந்த் பெரிய திரைக்கு அறிமுகமாகிறார். கிருஷ்ணா வானவராயனாக நடிக்க, மா.பா.கா வல்லவராயனாக அவருக்கு தம்பியாக நடிக்கிறார். அதுதவிர, பஞ்சுமிட்டாய் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஒருவர் அறிமுகம் ஆகிறார்.

சந்தானம், சிவகார்த்திகேயன் பணியாற்றிய அதே தொலைக்காட்சியில் இருந்துதான் தற்போது மா.பா.கா ஆனந்தும் வந்திருக்கிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment