Friday, November 22, 2013

கோரிக்கையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி!

 
காதலில் சொதப்புவது எப்படி' படத்தைப் போலவே 'பண்ணையாரும் பத்மினியும்' படமும் குறும்படமாக இருந்து சினிமாவாகி இருக்கிறது.

விஜய்சேதுபதி, ஐஸ்வர்யா, ஜெயப்பிரகாஷ், பால சரவணன், நீலிமா ராணி என்று பெரிய நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஒரு பிரிமியர் பத்மினி காரை விலைக்கு வாங்கும் பண்ணையார் ஒருவர், அதை ஓட்டத்தெரியாமல் இளைஞன் ஒருவனை டிரைவராக வேலைக்கு வைத்துக் கொள்கிறார்.

அந்தப் பண்ணையாருக்கும், பத்மினி என்கிற காருக்கும் உள்ள காதல், டிரைவருக்கும் காருக்கும் உள்ள காதல் என்று பல தளங்களில் காதலை  முழுக்க முழுக்க காமெடியாக எடுத்திருக்கிறார்களாம். படத்தில் டிரைவராக நடிப்பவர் விஜய் சேதுபதி.

இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை மூன்றரை கோடிக்குப் போயிருக்கிறதாம்.

அதில் இரண்டு கோடியை மட்டும் பணமாக வாங்கிக் கொள்ள சம்மதித்த தயாரிப்பாளர், மிச்ச பணத்தை வைத்து உங்கள் சேனலிலேயே விளம்பரம் செய்து கொடுங்கள் என்று கூறிவிட்டாராம்.

படத்திற்காக போட்ட பணம் மொத்தமும் இந்த சேட்டிலைட் ரைட்சிலேயே வந்துவிட்டது.  விஜய் சேதுபதிக்கு தினந்தோறும் ஒரு முறை போன் போட்டு நன்றி சொல்லி வரும் இவர், அப்படியே இன்னொரு படத்திற்கும் கால்ஷீட் கொடுங்க என்று கேட்டிருக்கிறார்.

மற்ற எல்லாருக்கும் 2017 வரை என் கால்ஷீட் ஃபுல் என்று கூறிவந்த விஜய் சேதுபதி, இவரது அன்பான கோரிக்கையை ஏற்றுக் கொண்டாராம்.

0 comments:

Post a Comment