Monday, November 25, 2013

இந்திய அரசிடம் நேதாஜியின் இருபது ரகசிய ஃபைல்கள் – தொடரும் மர்மம்..!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்னும் மனிதர் 1945க்கு பிறகு வெறும் மர்ம்மாகி போனார் – இதற்கிடையில் அவரை பற்றி இந்திய அரசு வைத்திருக்கும் 20 கோப்புகளை மறைக்கும் ரகசியம் – உண்மையில் நடந்தது என்ன?

nov 25 - nethaji

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் சுகேந்து சேகர் ராய் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் இருபது கோப்புகளை இந்தியா வைத்திருக்கிறது. இதனை பொதுமக்களுக்கு ஏன் கூறவில்லை? இதன் கோப்புகளை பற்றி அரசு பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பும் போதெல்லாம் மவுனம் சாதிப்பது ஏன்? இதனை பற்றி ஜனாதிபதி மாளிகையின் வட்டாரத்தில் விசாரித்தால் இந்த கோப்புகள் வெளியானால் இந்தியாவின் நட்புறவு பல நாடுகளை பாதிக்கும் என சில குற்றச்சாட்டுகாளை முன் வைக்கின்றனர் – நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை பற்றி.

அதில் முதல் குற்றச்சாட்டு இந்தியாவுக்கு எதிராய் சதி செய்தார் நேதாஜி – ஜப்பான் இரண்டாம் உலகப்போரின் போது நார்த் ஈஸ்ட் ஃப்ரிரன்டியரில் பல இடங்களை போரிட்டு பிரிட்டிஷ் ஆர்மியிடம் இருந்து கைப்பற்றிய போது அதில் பலர் சுபாஷுடன் சேர்ந்து “இந்தியன் நேஷனல் ஆர்மி” என்ற தனி இயக்கத்தை சுபாஷ் ஜப்பானுடன் சேர்ந்து செய்தார் என்பது ஒன்று.

இரண்டு -1941 ஆம் ஆண்டு சுபாஷை கைது செய்ய நினைத்த பிரிட்டிஷ் ஆர்மி படை அவரை வீட்டு காவலில் கொல்கத்தாவில் வைத்திருந்த போது அவர் அப்போது அங்கிருந்து வெளியாகி யாருக்கும் தெரியாமல் ஆப்கானிஸ்தான் வழியாக ஜெர்மனிக்கு சென்று ஹிட்லரிடம் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிக்க உதவி கோரினார். இதன் பிறகு அங்கிருந்து டோக்யோவுக்கு சென்று ஜப்பான் அரசின ஆதரவோடு இந்தியன் நேஷனல் ஆர்மியை உருவாக்கியதாகவும், அங்கு பல பயிற்ச்சிக்கு பிறகு அங்கிருந்து போர்ப்படைகளை திரட்டி தரை மார்க்கமாக மியான்மார்(பர்மா) வழியாக வரும்போது நார்த் ஈஸ்ட்டில் ஒரு முக்கிய இடத்தை கைப்பற்றிய இடம் தான் தற்ப்போதய மணிப்பூர்.

பின்பு அங்கிருந்தபடியே தன் இந்தியன் நேஷனல் ஆர்மியை வளப்படுத்திய சமயம் 1945 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ரகசியமாக கவுன்ட்டர் அட்டாக்கை கொடுத்த போது தான் நேதாஜி டைஹோக்கு விமான நிலையம் வழியாக தப்பித்தார் என்பதே கடைசி வரை உறுதியான தகவல். அதன் பிறகு எல்லாமே மர்ம்மா போச்சி.

இந்நிலையில் சிலர் அவர் விமான விபத்தில் இறந்ததாகவும், சிலர் அவரி புத்த பிட்சுவாக இந்தியாவுக்கு ஊடுருவினார் என்றும் சிலர் சைபீரியாவில் அரசியல் கைதியாக இருந்தார் என்று பல தகவல்கள் வந்தாலும் உறுதியான தகவல் ஏதும் இன்று வரை இல்லை.

இந்தியாவில் சுதந்திரம் அடைந்த பிறகு பல விசாரனை கமிஷன்கள் வைத்து அவரை பற்றி உளவு செய்தும் பார்த்தும் இன்று வரை சரியான தகவல்கள் ஏதும் இல்லை. இந்தியாவுக்கு எதிராய் ஹிட்லரிடம் கை கோர்த்த பல பயிற்ச்சி படங்கள் அந்த கோப்புகளில் உள்ளது என்றும் இந்தியாவிலும் ஹிட்லர் படை இருந்ததாகவும் பல விஷயங்கள் இன்று உலக நாடுகளுக்கு சலாம் போடும் இந்தியாவின் வெளியுறவு கொள்கை பாதிக்கபடும் என அந்த பைல்களை கிளாஸ்ஃபைடு ஆக்கி அதை ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் ஆட்களும் பாதுகாப்பாய் ரகசியம் காத்து வருகின்றனராம்.

0 comments:

Post a Comment