Wednesday, November 20, 2013

உடலின் செயலற்ற பகுதிகளை ஸ்டெம் செல்களால் இயங்க செய்யலாம்!


 ஸ்டெம் செல்களை அதிகரிக்கச் செய்வதன் மூலம் உடலில் செயலற்ற பகுதிகளை இயங்க செய்ய முடியும் என்று லைவ் 100 மருத்துவமனையின் இயக்குனர் நாகராஜ் தெரிவித்தார்.

பெங்களூருவில் திங்கள்கிழமை அம்மருத்துவமனையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: முதுகுத்தண்டில் எதிர்பாராதவிதமாக அடிபடுதவதால், விபத்துகளால் முதுகுதண்டு பாதிக்கப்பட்டு, உடலில் கை,கால்கள, இடுப்பு உள்ளிட்ட பகுதிகள் செயலிழந்து போகும். தற்போது புதிய மருத்துவ கண்டுபிடிப்பால், ஸ்டெம் செல்களை அதிகரிகச் செய்து செயலிழந்துள்ள பகுதிகளை இயங்கச்செய்ய முடியும்.

இது மருத்துவ உலகிறகு வர பிரசாதமாகும். விபத்து உள்ளிட்டவைகளால் உடலின் சில பகுதி செயல் இழந்துவிட்டால் பெரும்பாலானவர்கள் தங்களது எதிர்காலம் சூயன்யமாகிவிட்டதாக கருதுகின்றனர். தற்போது மருத்துவத்தில் பல வியக்க வைக்கும் கண்டுபிடிப்புகள் வந்துள்ளன. எனவே உடலில் சில பகுதிகள் செயலிழந்தால் யாரும் மன தைரியத்தை இழக்காமல், உரிய சிகிச்சை பெற்ற நீண்ட நாள் வாழ வழி உள்ளது என்பதனை உணரவேண்டும் என்றார்.

0 comments:

Post a Comment