Wednesday, November 13, 2013

ஓய்வு பெறும் சச்சினுக்கு ‘ஆட்டோகிராப் நினைவுப்பரிசு’ வழங்கும் மகாராஷ்டிர அமைச்சர்கள்!

 ஓய்வு பெறும் சச்சினுக்கு ‘ஆட்டோகிராப் நினைவுப்பரிசு’ வழங்கும் மகாராஷ்டிர அமைச்சர்கள்

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரை கவுரவித்து, வித்தியாசமான நினைவுப்பரிசு வழங்க மகாராஷ்டிர மாநில அமைச்சர்கள் முடிவு செய்துள்ளனர். அதாவது, சச்சினிடம் ஆட்டோகிராப் வாங்க முண்டியடிக்கும் ரசிகர்களின் மத்தியில், அமைச்சர்கள் தங்கள் ஆட்டோகிராப் அடங்கிய அழகிய நினைவுப்பரிசை வழங்க உள்ளனர்.

முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 40 உறுப்பினர்களும் தங்கள் கையெழுத்து பிரதிகளை விரைவாக அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தங்கள் கையெழுத்து எப்படி இடம்பெறவேண்டும் என்பதையும் அவர்கள் தெரிவிக்கலாம். இந்த கையெழுத்து பிரதிகளுடன் கூடிய தனிச்சிறப்பு மிக்க நினைவுப்பரிசு ஜே.ஜே. ஓவியப்பள்ளியில் வடிவமைக்கப்படுகிறது.

இந்த நினைவுப்பரிசு தயாரானதும் பிரமாண்ட பாராட்டு விழா நடத்தி சச்சினிடம் அதனை வழங்க உள்ளனர். 4 மணி வரை நடைபெற உள்ள இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகளையும் நடத்த உள்ளனர்.

சச்சினின் அலுவலகத்துடன் இணைந்து விழா நடைபெறும் தேதி மற்றும் நேரத்தை முடிவு செய்யும்படி விளையாட்டுத்துறை துணை இயக்குனர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

0 comments:

Post a Comment