Tuesday, November 26, 2013

'ஐ' படத்தில் பவர்ஸ்டார் இல்லையா?

 

சமீபத்தில் போலீஸ் விசாரணைக்காக அந்தமான் வரைக்கும் போய் வந்தார் பவர்ஸ்டார் சீனிவாசன்.

இந்த ட்ரிப் அவருக்கு எவ்வளவு மன உளைச்சலைக் கொடுத்திருக்கும்? என்று தெரியவில்லை.

விசாரணை முடிந்து சென்னை திரும்பி, பிணையில் ரிலீஸ் ஆகி, என்று பல கட்டங்களை தாண்டிய பவர் ஸ்டாரை மீண்டும் அதே அந்தமானுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள் ஒரு படத்திற்காக .

'நாலுபேரும் ரொம்ப நல்லவங்க' என்ற படத்திற்காகத்தான் இந்த விசேஷ ட்ரிப். இசைஞானி இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராசனின் மகன் ஜோ இயக்கும் படம் இது.

ஒரு குடும்பத்திடம் பணத்தை வாங்கிக் கொண்டு திருப்பி தராத டெரர் கேரக்டரில் நடிக்கிறாராம் பவர் ஸ்டார். கதைப்படி இவரை அந்தமான் சிறையில் அடைக்கிறார்கள் . அதற்காக, செல்லுலார் சிறையில் சில காட்சிகளை நடித்துக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார் பவர்.

'ஐ' படத்தில் பவர் ஸ்டார் நடித்த காட்சிகளை ஷங்கர் நீக்கிவிட்டார் என்று கூறப்படுகிறது. ஆனால், ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை படத்தில் சம்பந்தப்படுத்தி பார்க்கும் ஷங்கருக்கு இல்லை. எனவே பவர் கட் இருக்காது என்றும் கூறுகிறார்கள்.

படம் ரிலீஸான பிறகுதான் பவர்ஸ்டார் 'ஐ' படத்தில் இருக்காரா? இல்லையா? என்பது தெரியும்.

0 comments:

Post a Comment