Sunday, November 10, 2013

நாம் 100 கோடி இரசிகர்களை வைத்திருக்கிறோம் : கமல்!








 
 




 
ஆறு வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்று தனது திரைப் பயணத்தை தொடங்கிய கமல், இன்றைக்கு ஐம்பது ஆண்டுகளான பிறகும் அதே மாணவ பருவத்தைப்போன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார்.

குறிப்பாக விஸ்வரூபம் படத்தை ஹாலிவுட்டுக்கு இணையாக இயக்கி நடித்து மாபெரும் பரபரப்பை உண்டு பண்ணினார்.

அப்படம் சில சர்ச்சைகளை சந்தித்தாலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை பட்டியலில் இடம்பிடித்தது.

அதனால் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை அதிக புத்துணர்ச்சியுடன் இயக்கிக்கொண்டிருக்கும் கமல், 200 கோடியெல்லாம் ஒரு பெரிய வசூல் இல்லை. அதிகபட்சமாக ஆயிரம் கோடி ரூபாய் வரை நம்மால் வசூலிக்க முடியும் என்கிறார்.

காரணம், நாம் 100 கோடி இரசிகர்களை வைத்திருக்கிறோம். அதனால் அவர்கள் விரும்பும் வகையில் நல்ல படங்களை கொடுத்தால் இது கண்டிப்பாக சாத்தியமாகும். இதை எதிர்காலத்தில் செய்து காட்ட வேண்டும் என்ற ஆர்வமும் எனக்குள் உள்ளது என்கிறார் கமல்.

0 comments:

Post a Comment