Wednesday, September 25, 2013

காசிரங்கா தேசியப்பூங்கா - சுற்றுலாத்தலங்கள்!

                     காசிரங்கா தேசியப்பூங்கா
ந்தியாவின் பெருமைக்குரிய அரியவகை 'ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள்' உலவும் இடம் காசிரங்கா தேசியப் பூங்கா.

அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதிப் படுகையில் இது அமைந்துள்ளது. உலகின் ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களில் மூன்றில் இரண்டு பங்கு இங்குதான் உள்ளதாம். இவை தவிர யானைகள், காட்டெருமைகள், மான்கள் மற்றும் அரியவகை பறவையினங்களையும் காசிரங்காவில் காணமுடியும்.


காசிரங்கா தேசியப் பூங்கா உருவானதன் பின்னணி சுவாரஸ்ய-மானது. பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் கர்சன்பிரபுவின் மனைவி மேரி விக்டோரியா 1904ஆம் ஆண்டில் தற்போதைய காசிரங்கா பகுதிக்கு வந்தார். அரியவகை மிருகங்களை பார்த்து ஆச்சரியப்-பட்டுப் போன அவர், தனது கணவர் கர்சன் பிரபுவிடம் அந்த அரியவகை மிருகங்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 1905ஆம் ஆண்டில் காசிரங்கா காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. சுமார் 430சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த காட்டுப்பகுதி 1974ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக மாற்றப்பட்டது. 1985ஆம் ஆண்டில் இதனை உலக பண்பாட்டுச் சின்னமாக யுனெஸ்கோ அங்கீகாரம் செய்தது. 2005ஆம் ஆண்டில் நடந்த காசிரங்கா தேசியப்பூங்காவின் நூற்றாண்டு விழாவில் கர்சன் பிரபுவின் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.

 இத்தனை சிறப்புமிக்க காசிரங்கா தேசியப் பூங்காவில் உள்ள அரியவகை உயிரினங்களைக் காண உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வருகிறார்கள்.காசிரங்கா தேசியப் பூங்காவுக்குள் அங்குள்ள வாகனங்களில் சென்று ரசிக்கலாம். யானை சவாரியும் உண்டு. வனத்திற்குள் சுற்றுலாப் பயணிகள் நடந்துசெல்ல அனுமதி இல்லை. நவம்பர் மாதத்தின் மத்தியில் இருந்து ஏப்ரல் மாதத்தின் தொடக்கம் வரை காசிரங்காவிற்கு சுற்றுலா செல்வதற்கு ஏற்ற காலமாக கருதப்படுகிறது.
எப்படிப் போகலாம்?
காசிரங்கா தேசியப் பூங்காவிற்கு சாலை வசதி உள்ளது.220கி.மீ தொலைவில் கவுகாத்தியிலும் 90கி.மீ தொலைவில் ஜோர்ஹட்டிலும் விமான நிலையங்கள் உள்ளன.இந்த இரு நகரங்கள் மற்றும் ஃபர்கெட்டிங் ஆகிய இடங்களில் ரயில்நிலையம் உள்ளது.அங்கிருந்து சாலை மார்க்கமாக தேசியப்பூங்காவிற்கு சென்று விடலாம்.

0 comments:

Post a Comment