Wednesday, September 18, 2013

பாரம்பரியம் சொல்லும் பத்மநாபுரம் அரண்மனை - சுற்றுலாத்தலம்


பாரம்பரியம் சொல்லும் பத்மநாபுரம் அரண்மனை
 
   ன்னியாகுமரி மாவட்டத்தின்  தக்களைக்கு அருகில் பத்மநாபபுரம் என்னும் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது இந்த அரண்மை. 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அரண்மனை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக பத்மநாபபுரம் விளங்கியபோது கட்டப்பட்டது. நுணுக்கமான மர வேலைப்பாடுகளுடன் கூடிய 14 கட்டிடங்கள், 144 ராட்சத அறைகள் கொண்ட இந்த அரண்மனை சுற்றுலா பயணிகளின் கண்ணுக்கு விருந்தாக அமைகிறது.
 மேலும் இந்த அரண்மணையில் எங்குமே மின் விளக்குகள் கிடையாது. சூரியனின் ஒளியினாலே இந்த அரண்மனைக்கு வெளிச்சம் கிடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.இந்த அரண்மனை தமிழகப் பகுதியில் அமைந்திருந்தாலும் கேரள தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்படுகிறது.

வரலாறு :
  கி. பி.1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள் என்பவரால் கட்டப்பட்ட இந்த அரண்மையை பி.1706-1758 வரை ஆண்ட அனிழம் திருநாள் மார்த்தாண்ட வர்மா என்பவரால் விரிவுபடுத்தப்பட்டது.1795 வரை பத்மநாபபுரமே திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகரமாக விளங்கியது.1795 இல் தான் தலைநகரம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது.

அரண்மனையின் முகப்பு:
   கேரளக் கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் இந்த அரண்மனை, 6.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கிறது. நுட்பமான மரவேலைப்பாடுகளை அரண்மனையின் உட்கட்டமைப்பெங்கிலும் பரவலாகக் காணலாம்.. பிரமாண்டமான அரங்குகளும் தகதகக்கும் அலங்காரங்களும் இந்த அரண்மனையில் இல்லையென்றாலும், அரண்மனைக்கேயுரிய  செழிப்பானது , அரண்மனையின் உட்புற , வெளிப்புற வடிவமைப்பில் காணலாம்.
பூமுகத்து வாசல்:
  ரண்மனையின் முகப்பாகிய பூமுகத்துக்குச் செல்லும் முதன்மை மரவேலைப்பாடுகளுடைய பெரிய இரட்டைக் கதவையும் கருங்கற் தூண்களையும் உடையது. கேரளப்பாரம்பரியத்துக்கே யுரித்தான கலை நயத்துடன் அமைக்கப்பட்ட பூமுகத்தில் உள்ள மரச் செதுக்கல் வேலைப் பாடுகள் பார்ப்போரைப் பிரமிக்க வைக்கும். ஒன்றிலொன்று வேறுபட்ட 90 வகைத்தாமரைப்பூக்கள் செதுக்கப்பட்ட மரக்கூரை மிகவும் பிரசித்தமானது.
இங்கு பொதுமக்களின் பார்வைக்காக, சீனர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட சிம்மாசனம், முற்றிலும் முழு கருங்கல்லால் செய்யப்பட்ட சாய்மனைக்கதிரை, உள்ளூர் மக்களால் ஒணம் பண்டிகைக்கால வாழ்த்தாக வழங்கப்பட்ட ஒணவில்லு போன்றவை பூமுகத்தில் உள்ளன.
மந்திரசாலை:
   பூமுகத்தின் முதலாவது மாடியில் மந்திரசாலை இருக்கிறது. மந்திரசாலைக்குச் செல்லும் படிக்கட்டு மிகவும் ஒடுக்கமானது, மரத்தால் ஆனது. அதனால் அப்படிக்கட்டில் ஒவ்வொருவராகவே ஏறமுடியும். பளபளக்கும் கரிய தரையுடன் காணப்படும் மந்திரசாலையில் தான், மன்னர் மந்திரிகளுடன் கலந்துரையாடியதாக சொல்லப்படுகிறது. மந்திரசாலையின் சுவரும் கூரையும் மரங்களாலேயே அமைக்கப்பட்டுள்ளன. எந்த வித செயற்கை விளக்குகளுமின்றி, சூரிய ஒளியின் உச்சப்பயனைப் பெறக்கூடிய வகையில் சலாகைகள் மூலமும் மைக்கா கண்ணாடி மூலமும் சுவர்கள் அமைக்கப் பட்டிருக்கின்றன.
மணிமாளிகை:
   ந்திரசாலையைக் கடந்து படிகளால் கீழே இறங்கினால் வருவது மணிமாளிகைக்குச் செல்லலாம். கிராமத்தவர் ஒருவரால் வடிவமைக்கப்பட்ட மணிக்கூட்டுடனான கோபுரத்தை இந்த மாளிகையில் காணலாம். இந்த மணிக்கூடு ஏறத்தாழ 200 ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டதாகக் கருதப் படுகிறது. இம்மணிக் கூட்டின் பின்னனியிலிருக்கும் தத்துவம் வியக்கத்தக்கது. மணிக்கொரு தடவை ஒசையெழுப்பும் இந்த மணிக்கூட்டின் மணியோசையை 3கி.மீ சுற்று வட்டாரத்திற்குள்ளிருக்கும் எல்லோராலும் கேட்க முடியும்.
அன்னதான மண்டபம்:
  ணிமாளிகையைக் கடந்துச் சென்றால் வருவது, அன்னதான மண்டபம். கீழ் மண்டபத்திலே ஏறத்தாழ 2000 பேர் ஒன்றாக அமர்ந்து உணவருந்த கூடியதாக இம்மண்டபம் உள்ளது.
   ஊறுகாயை வைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட  சீனச்சாடிகளும் இம் மண்டபத்திலேயே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மன்னர்கள் அன்னதானத்துக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை இந்த அன்னதான மண்டபத்தின் பிரமாண்டம் உணர்த்தும்.
தாய்க்கொட்டாரம்:
  ன்னதான மண்டபத்தை அடுத்து வந்தால் வருவது இந்த  மாளிகைத் தொகுதியில் மிகவும் பழைமையான மாளிகையாக இருக்கும் தாய்க்கொட்டாரம். இது வேணாட்டு அரசனாக இருந்த இரவி வர்மா குலசேகர பெருமாளினால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. மாளிகையில் காணப்படும் ஏகாந்தமண்டபம் சுதேச பாணியிலே செதுக்கப்பட்ட மரத்தூண்களையுடையது. இந்தத் தாய்க் கொட்டாரம், பாரம்பரிய வீட்டமைப்பில் கட்டப்பட்டது. முதலாவது மாடியில் செதுக்கப்பட்ட மரப்பலகைகளால் பிரிக்கப்பட்ட படுக்கையறைகளும் இங்கு காணப்படுகின்றன.

இதற்கு வடக்கு பகுதியில் யாகங்கள் செய்ய ஹோமபுரம் உள்ளது. இதற்கு கிழக்குப் பகுதியில் சரஸ்வதி கோயிலும் உள்ளது. இக்கோயிலில் இருக்கு சரஸ்வதி திருவுருவம் நவராத்திரி சமயத்தில் திருவனந்தபுரத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.
உப்பரிகை:
    ப்பரிகை, மன்னன் மார்த்தாண்ட வர்மனால் கி.பி. 1750 இல் அமைக்கப்பட்டது. ஸ்ரீபத்மநாபனுக்காக இந்த மாளிகை அமைக்கப்பட்டதால் மிகவும் புனிதமானதாகக் கருதப்பட்டது. மூன்று மாடிகளையுடைய இந்த மாளிகையில், கீழ்ப்பகுதி அரச திறை சேரியாகக் காணப்பட்டதாக சொல்லப்படுகிறது.
முதலாம் மாடியில் மருத்துவக் குணம் கொண்ட மரத்தாலான மருத்துவக் கட்டில் உள்ளது. இரண்டாவது மாடி, மன்னனின் ஓய்வெடுக்கும் பகுதியாகக் காணப்படுகிறது. மூன்றாவது மாடியில் இராமாயணம் மகாபாரதம், பைபிள் ஆகியவற்றில் வரும் சம்பவங்களைச் சித்தரிக்கும் ஓவியங்கள் காணப்படுகின்றன.உப்பரிகையின் முதலாம் மாடியிலிருந்து அந்தப் புரத்துக்குச் செல்லமுடியும். தற்போது அந்தப்புரத்திலே இரண்டு பெரிய ஊஞ்சல்களும் ஆளுயரக் கண்ணாடியும் காணப்படுகின்றன.அந்தப்புத்தைத் தாண்டிச் சென்றால் வருவது நீண்ட மண்டபமாகும். மண்டபத்தின் இருமருங்கிலும் சமஸ்தானத்தின் வரலாற்று நிகழ்வுகள் ஓவியங்களாகத் தொங்குகின்றன. அடிப்படையில் அவை யாவுமே மன்னர் மார்த்தாண்டவர்மாவுடன் தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன.

இந்திர விலாசம்:
   ண்டபத்தின் வழியே சென்றால் வருவது இந்திர விலாசம். மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் விருந்தினர்களுக்காக  அமைக்கப்பட்ட மாளிகை தான் இந்த இந்திரவிலாசமாகும். அரண்மனையின் மற்ற பகுதிகளைப் போல் இல்லாமல் இம் மாளிகை மேல் நாட்டு பாணியில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் கதவுகளும் சன்னல்களும் பெரியதாகவும்,. கூரை உயரமாகவும் உள்ளது. விருந்தினர் மாளிகையின் சன்னல்கள், அந்தப்புரப்பெண்கள் நீராடும் தடாகத்தை நோக்கியபடி  அமைந்துள்ளது.
நவராத்திரி மண்டபம்:
  ந்திரவிலாசத்தை அடுத்து வருவது நவராத்திரி மண்டபமாகும். இங்குள்ள கருங்கல் மண்டபமும், ரஸ்வதி ஆலயமும்,  மன்னன் மார்த்தாண்டவர்மாவின் காலத்தில் கட்டப்பட்டதாகும். மண்டபத்தின் கூரை முழுவதும் கருங்கல்லாம் அமைக்கப்பட்டுள்ளது. அழகொளிரச் செதுக்கப்பட்ட கருங்கற்றூண்கள் கூரையைத் தாங்குகின்றன. நவராத்திரிக் காலங்களில் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த இந்த நவராத்திரி மண்டபம் பயன்படுத்தப்பட்டது. மன்னர் முதலானோர் மண்டபத்தில் இருந்தும், அரண்மனைப் பெண்கள் மண்டபத்தில் தென்கிழக்குப் பகுதியில் மரச்சலாகைகளால் அடைக்கப்பட்ட பகுதியிலிருந்தும் கலை நிகழ்ச்சிகளைப் பார்வையிடலாம். எளிமையான மரவேலைப்பாடுடைய அரண்மனையின் கட்டமைப்புக்கு மாறாக விஜய நகரக்கட்டட பாணியை உடையதாக இந்த மண்டபம் கட்டப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
பாதுகாப்பு அமைப்பு:
   டுக்கமான வாசலும், பாதையும் கொண்ட பத்மநாபபுரம் அரண்மனை ஒருவர்பின் ஒருவராக சொல்லும்படி அமைக்கப்பட்டுள்ளது. கலகம் ஏற்படும் காலங்களில் கலகக்காரர்களை எளிதாக எதிர்கொள்வதற்காக இப்படி வடிவமைத்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. பிரதான கட்டடத் தொகுதியில் காணப்படும் சுரங்கப்பாதைக்கான வழியும் கூட இதனையே பறைசாற்றுகிறது.
வெளியிலிருந்து அரண்மனை சன்னல்களூடாகப் பார்த்தால், உள்ளே நடப்பது எதுவும் தெரியாது. ஆனால் உள்ளிருந்து பார்த்தால் வெளி வீதியில் நடப்பவற்றை நன்கு அவதானிக்கலாம். அத்தகைய விதமாக சன்னல்கள் யாவும், மரச் சலாகைகளால் அடைக்கப் பட்டிருக்கின்றன.அந்தப்புரப் பெண்கள், வெளியாரின் பார்வையிலிருந்து ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பதற்கும் இந்த கட்டமைப்பு சான்றாக அமைகிறது.

0 comments:

Post a Comment