Monday, September 23, 2013

ஆஸ்கார் விருதை இழந்த விஸ்வரூபம்!


உலகின் மிகப்பெரிய விருதான ஆஸ்கர் விருதினை இழந்துள்ளது விஸ்வரூபம். 



அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருதுக்கான இந்திய படத்தின் தேர்வு நடந்தது. 


இதில் தேசிய விருது பெற்ற குஜராத்தி படமான தி குட் ரோட், பகாக் மில்கா பகாக், இங்கிலீஸ் விங்கிலீஸ், லஞ்ச் பாக்ஸ், பிருத்விராஜ் நடித்த மலையாள படமான செல்லுலாயிட், கமலின் விஸ்வரூபம் உள்பட 22 படங்கள் போட்டியிட்டது. 


இறுதி சுற்றுக்கு தி குட் ரோட், பகாக் மில்கா பகாக், விஸ்வரூபம் ஆகிய மூன்று படங்கள் வந்தது. 


19 பேரைக் கொண்ட தேர்வு குழு 5 மணிநேரம் தீவிரமாக விவாதித்து, ஆலோசித்து தேசிய விருது பெற்ற குஜராத்தி படமான தி குட் ரோட் படத்தை தேர்வு செய்து அறிவித்தனர். 


இதனால் கடைசி வரை நம்பிக்கையோடு எதிர்பார்க்கப்பட்ட விஸ்வரூபம் ஆஸ்கர் போட்டி வாய்ப்பை இழந்தது.

0 comments:

Post a Comment