Saturday, August 31, 2013

டீசல்,மண்ணெண்னை விலை உயரப்போகிறது!

Hike in petroleum products


டீசல்,மண்ணெண்னை மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயரப்போகிறது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சியின் காரணமாக கச்சா எண்ணெய்க்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.இதனால் ஏற்பட்ட நஷ்டம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்ட பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.


பெட்ரோலிய துறை அமைச்சர் இது தொடர்பாக நிதி அமைச்சர் பி.சிதம்பரத்தை சந்தித்து பேசியுள்ளார்..அந்த சந்திப்பின் போது பெட்ரோலிய பொருட்களின் விலையை உயர்த்தாவிட்டால் இந்த வருடம் மட்டும் 180000 கோடி இழப்பு ஏற்படும் அதை ஈடுகட்ட விலை உயர்வு அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

விலையை உயர்த்த வேண்டும் என பிரதமருக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
டீசல் விலை ஐந்து ரூபாய் வரையிலும்,மண்ணெண்னை விலை இரண்டு ரூபாயும்,எரிவாயு விலை ஐம்பது ரூபாயும் அதிகரிக்கும் என அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Diesel price may be hiked by Rs 3-5 a litre, LPG by Rs 50

0 comments:

Post a Comment