Tuesday, August 20, 2013

பொது அறிவு தகவல் துளிகள்!



• கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. 
 
• இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாவது ஜோதிடப் புத்தகங்கள்தான்.
 

 
• தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சட்டசபைத் தொகுதி சென்னையிலுள்ள வில்லிவாக்கம்.
 

 
• சலவைக்கல்லுக்குப் பெயர் பெற்ற நாடு இத்தாலி.
 

 
• உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியாதான்.
 

 
• ஆமை நிலத்தில்தான் மெதுவாகச் செல்லுமே தவிர நீரில் வேகமாக நீந்தும்.
 

 
• உலகிலேயே மினரல் வாட்டர் அதிகம் பயன்படுத்துபவர்கள் ரஷ்யர்கள்தான்.
 

 
• தாய்லாந்து நாட்டில் மீன் சண்டை ஒரு பிரபலமான விளையாட்டு.

• அமெரிக்காவில் ஒவ்வொரு நிமிடமும் 12 கார்கள் தயாரிக்கப்படுகின்றன.
 

 
• உலகிலேயே அதிகமாக சேமிப்பவர்கள் சிங்கப்பூர்க்காரர்கள்தான்.
 

 
• இந்தியாவின் முதல் பைலட் ஜே.ஆர்.டி.டாட்டா.


• இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பிய வீரன் அலெக்ஸாண்டர்.

• குதிரை லாயத்தில் வேலை செய்தவரின் மகன்தான் பிரபல ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியர். 
 
• எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வே தம் வாழ்நாளில் பேனா பிடித்ததில்லை. பென்சில்தான்.
 

 
• கிரேக்க நாட்டு தேசியகீதம்தான் உலகின் மிக நீளமான தேசியகீதம். 128 வரிகள்.
• மின்சார ரயிலை இயக்க 16 ஆயிரம் வோல்ட் மின்சாரம் தேவைப்படுகிறது. 
 
• உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் எல்லா சீதோஷ்ண நிலைகளிலும் வளரக்கூடிய ஒரே பிராணி நாய்.

• அதிகாலை நேரத்தில் மட்டுமே வாத்துகள் முட்டையிடும்.
 

 
• கைக்குட்டை, பதினான்காம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

• எகிப்திய இதிகாசத்தில் "இசிஸ்' என்ற பெயர் "ராணி'யைக் குறிக்கின்றது.

• கடல் வழியே அனுப்பப்படும் தந்திக்கு "கேபிள்' என்று பெயர்.
 
• ஜப்பானில் மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதுவதற்குக் கற்றுக் கொடுக்கிறார்கள்.

• முதன் முதலில் தமிழில் தந்தி அனுப்பும் முறை ஈரோட்டில் அறிமுகமானது. 
 
• தமிழ்ப் பத்திரிகைகளில் முதன் முதலில் கார்ட்டூன்களை வெளியிட்டவர் மகாகவி பாரதியார்.
  

 
• ஜப்பானியர்களுக்கு 3 என்ற எண் பிடிக்காது.
 

 
• ஒரு குண்டூசியின் தலைப் பரப்பில் பத்தாயிரம் பாக்டீரியாக்களை அடுக்க முடியும்.
 
• இமய மலையில் வசிக்கும் யாக் எருமையின் பால் பழுப்பு நிறத்தில் இருக்கும். 
 
• டி.வி.ஆன்டெனா, சமயங்களில் இடிதாங்கியாகவும் செயல்படும்.

• டிப்பர் என்ற பறவை நீரின் அடி ஆழத்திற்குச் சென்று, இரையைப் பிடிக்கும்.
 

 
• ஆழ்கடலைப் பற்றி ஆராயக்கூடிய இயலுக்கு ஓஷனோகிராஃபி என்று பெயர்.
 

 
• இந்தியாவில் 22,000-க்கும் மேற்பட்ட ரெயில்வே லெவல் கிராஸிங்குகளுக்கு மூடுகதவே (கேட்) கிடையாது.
 

 
• இந்தியாவில் முதன் முதலாக மின்சார வசதியைப் பெற்றது கல்கத்தா நகரம்.
• 10 நிமிடங்கள் ஓடக்கூடிய கார்ட்டூன் திரைப்படத்துக்கு சுமார் 1,100 சித்திரங்கள் தேவைப்படும். 
 
மனிதனின் தும்மல் வேகம் மணிக்கு 180 கிலோமீட்டர்கள் தூரம் இருக்கும்.
• உலகிலேயே அதிகமாக இனிப்பு சாப்பிடுகிறவர்கள் இங்கிலாந்துக்காரர்கள். 
 
• உலகிலேயே சீனாவில்தான் சைக்கிள்கள் அதிகம்.
 

 
• ஜோக்ஸ் சொல்லித் தருவதற்கென்றே ஒரு கல்லூரி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரத்தில் உள்ளது.
 

 
• உலகில் அதிக அளவு கண்தானம் வழங்குபவர்கள் இலங்கைக்காரர்கள்தான்.
 

 
• கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒ
üவையாருக்கு மூன்று கோயில்கள் உள்ளன. 
• உலகிலேயே அதிக அளவில் தபால் நிலையங்கள் உள்ள நாடு இந்தியாதான்.

• முதன் முதலில் மருத்துவமனை அமைக்கப்பட்ட நாடு இத்தாலி.
 

 
• நீர்யானை மனிதனைவிட வேகமாக ஓடும்.

• ஆஸ்திரேலியாவில் மனிதர்களைவிட ஆடுகளே அதிகம்.
 
• உலகில் 26 நாடுகளில் கடற்கரை கிடையாது.
 

 
• பூமிக்கு மிக அருகிலுள்ள நட்சத்திரமே 4,02,32,500 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளதாம்.
 

 
• விரல்களின் 40 சதவீத பலம் கட்டை விரலில்தான் இருக்கின்றது.
 

 
• ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினமாக முதழி முதலில் கொண்டாடிய நாடு இங்கிலாந்து.

• யானை தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மட்டுமே பிற மிருகங்களுடன் சண்டையிடும்.
 
• விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன் இரண்டு முறை எம்.பி.ஆக இருந்தவர்.
 
• ஒரு சிலந்தி வலையிலுள்ள நூல் முமுவதையும் இழுத்துப் பார்த்தால் 2000 மைல்கள் நீளம் கூட இருக்கும்.
 
 

1 comments:

  1. Looking For RRB Secunderabad Group D Result 2018? Look no more. Here, we are, providing the all RRB Result, may it be Group D, ALP, and RPF right, at one place at railway result.in. So, keep yourself updated with RRB Result.

    ReplyDelete